search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளே ஆப் சுற்று"

    • நேற்றைய போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.
    • பிளே ஆப் சுற்று போட்டியில் 3 ரன் அவுட் நடந்தது இது 2-வது முறையாகும்.

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் சுற்றின் 2ஆவது போட்ட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

    பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒவ்வொரு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதில், முக்கியமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளனர்.

    இதன்மூலம் பிளே ஆப் சுற்று போட்டியில் 3 ரன் அவுட் நடந்தது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டு மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் அவுட் ஆனது. இதில், சிஎஸ்கே வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

    கேமரூன் கிரீன் வீசிய 12-வது ஓவரின் 5-வது பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 2 ரன்கள் எடுக்க முயற்சித்தார். அப்போது 2-வது ரன்னிற்கு ஓடும் போது தீபக் ஹூடா மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் முட்டி மோதிக் கொண்டனர். இதனால், அவர் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.

    இதே போல பியூஷ் சாவ்லா வீசிய 3-வது பந்தில் அடித்து விட்டு ஓட முயற்சித்துள்ளார். ஆனால், ஹூடா வேண்டாம் என்று மறுப்பு தெரிவிக்க பின் மீண்டும் கிரீஸுக்குள் சென்றார். அப்போது கேமரூன் கிரீன் பந்தை தடுத்து ரோகித் சர்மாவிடம் வீசினார். அதற்குள் ரன் ஓட முயற்சித்த கிருஷ்ணப்பா கவுதம்மை, ரோகித் சர்மா ரன் அவுட் செய்தார்.

    இந்த 2 பேரையும் ரன் அவுட்டாக்கிவிட்டதாக கருதப்படும் தீபக் ஹூடாவும் ரன் அவுட்டாகி வெளியில் சென்றார். நவீன் உல் ஹாக் அடித்த பந்திற்கு ரன் எடுக்க தீபக் ஹூடா ஓடியுள்ளார். ஆனால், கிரீன் பந்தை தடுத்து ஆகாஷ் மத்வாலிடம் வீசியிருக்கிறார். அவரோ ரோகித் சர்மாவிடம் வீச தீபக் ஹூடா பரிதாபமாக ஆட்டமிழந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 3 ரன் அவுட் லக்னோ அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து 2-வது முறையாக லக்னோ அணி எலிமினேட்டர் சுற்றில் வெளியேறியுள்ளது.

    • நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
    • எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.

    பெங்களூரு:

    பெங்களூரு அணி வெளியேறுவதற்கு குஜராத் தொடக்க வீரர் சுப்மன்கில் காரணமாக இருந்தார். அவரது அதிரடி சதத்தால் குஜராத் 198 ரன் இலக்கை எடுத்து பெற்றது. அவர் 52 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சுப்மன்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை சென்னையில் சந்திக்கிறோம். சி.எஸ்.கே.வை சென்னையில் எதிர்கொள்வது பரபரப்பாக இருக்கும். சேப்பாக்கம் ஆடுகளத்தில் எங்களது பந்துவீச்சு சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.

    நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெங்களூர் அணிக்கு எதிரான சதம் சிறப்பானது. எனது ஷாட் மிகுந்த திருப்தியை அளித்தது.

    இவ்வாறு சுப்மன்கில் கூறியுள்ளார். அவர் இந்த சீசனில் 680 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    • பெங்களூர் அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதால் விராட்கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.
    • ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெளியே இருந்த அவரது முகம் ஏமாற்றத்துடன் காணப்பட்டது.

    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த கடைசி 'லீக்' ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சிடம் தோற்றது.

    வெற்றிபெற வேண்டிய இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி தோற்றதால் பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    இந்த ஆட்டத்தில் விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடினார். அவர் 61 பந்துகளில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 101 ரன் எடுத்தார். தொடர்ச்சியாக 2 சதத்தை பதிவு செய்தார். மேலும் ஐ.பி.எல்.லில் 7 சதம் அடித்து சாதனை புரிந்தார்.

    விராட்கோலியின் இந்த சதம் பலன் இல்லாமல் போனது. அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குஜராத் வீரர் சுப்மன்கில் செஞ்சூரி அடித்து குஜராத் அணியை வெற்றி பெற வைத்து பெங்களூரை வெளியேற்றினார்.


    பெங்களூர் அணி 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனதால் விராட்கோலி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் வெளியே இருந்த அவரது முகம் ஏமாற்றத்துடன் காணப்பட்டது. அவரால் தோல்வியை தாங்கி கொள்ள முடியவில்லை.

    மற்ற போட்டிகள் முடிந்த பிறகு இளம் வீரர்களுடன் கலகலப்பாக பேசி சிரித்த விராட் கோலி, இந்த போட்டி முடிந்த பிறகு சோகமாகவே காணப்பட்டார். குஜராத் அணி வீரர்கள் கோலியிடம் ஜெர்சியில் ஆட்டோகிராப் கேட்டனர். ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த அவர் சோகத்துடனே காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் தரும் விதமாக பதிவு செய்து வருகின்றனர்.

    இந்த சீசனில் விராட் கோலி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 14 ஆட்டத்தில் 639 ரன் குவித்துள்ளார். 2 போட்டியில் அவுட் ஆகாததால் சராசரி 53.25 ஆகும். ஸ்டிரைக் ரேட் 139.82 ஆக உள்ளது. இரண்டு சதமும், 6 அரை சதமும் அடித்துள்ளார்.

    • குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.
    • சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    ஐபிஎல் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை - ஐதராபாத அணிகள் மோதின. இதில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் கேமரூன் க்ரீன் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.

    இதனையடுத்து இரவு நடந்த மற்றோரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு- குஜாராத் அணிகள் மோதின. வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் ஆடிய பெங்களூரு அணி தோல்வியடைந்தது.

    ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றாலும் பெங்களூரு அணி குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் மட்டுமே மும்பை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் தொடரில் 4-வது அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று தகுதி பெற்றது.

    பெங்களூரு அணிக்கு எதிராக பேட்டிங் ஆடிய குஜராத் அணியில் சுப்மன் கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்ததோடு குஜராத்தை வெற்றி பெற செய்தார்.

    இந்நிலையில், குஜராத்தின் வெற்றியால் மும்பை அடுத்த சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடும் விதமாக சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் செய்துள்ளார்.

    அதில், கேமரூன் க்ரீன் மற்றும் சுப்மன் கில் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடினர். மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. விராட் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் அடித்து நன்றாக விளையாடி வருகிறார்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.
    • டெல்லி அணி 9-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே.அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப் புக்கு 223 ரன் குவித்தது. இதனால் டெல்லி அணிக்கு 224 ரன் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கான்வே 52 பந்தில் 87 ரன்னும் (11 பவுண்டரி , 3 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 79 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), ஷிவம் துபே 9 பந்தில் 22 ரன்னும் (3 சிக்சர்), ஜடேஜா 7 பந்தில் 20 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கலீல் அகமது, நோர்க்கியா, சேட்டன் ஷகாரியா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுத்தது. இதனால் சென்னை அணி 77 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் வார்னர் அதிகபட்சமாக 58 பந்தில் 86 ரன்னும் (7 பவுண்டரி, 5 சிக்சர்), எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். தீபக் சாஹர் 3 விக்கெட் டும், பதிரனா, தீக் ஷனா தலா 2 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    சி.எஸ்.கே. பெற்ற 8-வது வெற்றியாகும். 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.

    டெல்லி அணியை இந்த சீசனில் 2-வது தடவையாக வீழ்த்தியது. சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் 27 ரன்னில் தோற்கடித்து இருந்தது.

    இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

    சி.எஸ்.கே. அணி 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்து சாதனை படைத்தற்காக செய்முறை எதுவும் இல்லை. சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கான உகந்த மற்றும் சவுகரியமான சூழலையும், இடத்தையும் உருவாக்கிட வேண்டும். அதற்காக சில வீரர்கள் தங்களின் இடத்தை கூட தியாகம் செய்ய வேண்டும்.

    மேலும் அணி நிர்வாகமும் ஒரு நல்ல சூழலை உருவாக்கி கொடுத்து இருக்கிறது. பயிற்சியாளர்கள் குழுவும், உதவியாளர்களும் எங்களுக்கு எப்போதுமே ஊக்கமாக இருக்கிறார்கள்.

    வீரர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இல்லையேல் நாம் எதுவும் செய்ய இயலாது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் (டெத் ஓவர்) பந்து வீசுவதற்கு தன்னம்பிக்கை மிக முக்கியம் என்று நினைக்கிறேன். துஷார் தேஷ்பாண்டே தொடர்ந்து அழுத்தமான சூழல்களில் இருந்து தன்னை மேம்படுத்தி கொண்டார். அவரிடம் தற்போது தன்னம்பிக்கை இருக்கிறது.

    பதிரனா டெத் ஓவர்களை வீசுவதற்கென்றே இயல்பான திறமையை பெற்றுள்ளார். தொடர்ந்து அதே வீரர்களுடன் விளையாடும்போது உதவியாக இருக்கிறது.

    தனிப்பட்ட சாதனைகளை பற்றி கவலைப்படாமல் அணியின் நலனுக்காக ஆடும் வீரர்களை தேர்வு செய்வதே முக்கியம். வீரர்கள் 10 சதவீத திறனுடன் வந்தாலும் ஓவர்களை அணியில் 50 சதீதம் வரை சிறந்த வீரராக மாற்றலாம்.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    டெல்லி அணி 9-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஐபிஎல் என்றாலே விறுவிறுப்பு தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் கடைசி நான்கு போட்டிகள் இருக்கும் வரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் கடைசி மூன்று அணிகள் எவை என்பதில் விறுவிறுப்புகள் கூடிக் கொண்டே இருந்தது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு ரெண்டாவது அணியாக முன்னேறியது. கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா, லக்னோ அணிகள் மோதின.

    இந்த ஆட்டம் லக்னோவிற்கு மட்டுமல்ல மும்பை, ஆர் சி பி அணிகளுக்கும் முக்கிய போட்டியாக அமைந்தது. இந்த போட்டியில் ஒருவேளை கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் ஆர் சி பி மும்பை ஆகிய இரண்டு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் எளிதாக மூன்றாவது நான்காவது இடங்களை பிடிக்கும் என்ற நிலை இருந்தது. நேற்று நடைபெற்ற போட்டியில் ரிங் சிங் அதிரடியாக விளையாடி கொல்கத்தாவை வெற்றிபெறும் நிலைக்கு கொண்டு சென்றார்.

    ஆனால் கடைசி மூன்று பந்துகளில் 3 சிக்ஸ் தேவை என்ற நிலையில் இரண்டு சிக்ஸ் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்ததால் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இதனால் மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இன்னும் ஒரு இடம் தான் இருக்கிறது. அந்த இடத்திற்கு ஆர் சி பி, மும்பை ராஜஸ்தான் 3 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் ரன் ரேட் அடிப்படையில் இருந்தாலும் அந்த அணிக்கு 14 போட்டிகள் முடிந்து விட்டன.

    இன்று மதியம் நடக்கும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஹைதராபாத் அணிகள் வான்கடே மைதானத்தில் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றே தீர வேண்டும். ஒரு வேளை வெற்றி பெற்றாலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏனென்றால் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் ஆர்சிபி குஜராத் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஏற்கனவே மும்பையை விட அதிக ரன் ரேட்டில் இருக்கும் ஆர்சிபி நாலாவது இடத்திற்கு முன்னேறி விடும்.

    ஒருவேளை ஆர்சிபி தோல்வி அடைந்து மும்பை வெற்றி பெற்றால் மும்பை முன்னேறிவிடும். இதனால் மும்பை அணி வான்கடேயில் வெற்றி பெற்றாலும் ஆர்சிபி குஜராத் அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதனால் இன்றைய இரண்டு ஆட்டங்களும் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை சொந்த மண்ணில் ஆர்சிபி யும், மும்பையும் தோல்வி அடைந்தால் ராஜஸ்தான் அணியும் இந்த இரண்டு அணிகளும் தலா ஏழு வெற்றிகளுடன் இருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி முன்னேறும்.

    ஒருவேளை மும்பை தோற்று ஆர் சி பி-யும் தோல்வி அடையும் நிலையில் இருந்தால் கூட கடைசி போட்டி என்பதால் குஜராத்தை இத்தனை ரன்னுக்கு சுருட்ட வேண்டும் அல்லாத பட்சத்தில் இத்தனை ரன்கள் அடிக்கவேண்டும் என்று நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே எந்த ஒரு நிலையில் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெறும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் இன்றைய சண்டே ஸ்பெஷல் ஆக ரசிகர்களுக்கு அமையும் என்ற சந்தேகம் இல்லை. அதிரடி பரபரப்பு திரில் மோதலை இன்றைய போட்டியில் அதிகமாக ரசிகர்கள் எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.

    • பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை அணி அவர்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியடைய வேண்டும்.
    • மும்பை பெங்களூரு அணிகள் தோல்வியடைந்தால் ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    16-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்தத் தொடரில் ஐதராபாத்தில் 18-ந் தேதி நடந்த ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் பிளேஆஃப் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 14 புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும், புள்ளிகள் பட்டியலில் மும்பையை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு அணி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை அணி அவர்களது கடைசி லீக் போட்டியில் தோல்வியடைய வேண்டும். அப்படி நடந்தால் பெங்களூரு அணி கடைசி லீக் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் கூட ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். மும்பை ஒருவேளை வெற்றி பெற்றால் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் போதும். ஏனென்றால் மும்பையை விட பெங்களூரு அணி அதிக ரன் ரேட் வைத்துள்ளது. இந்த 2 அணியும் தோல்வியடைந்தால் ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    ஒருவேளை கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் லக்னோ அணி தோல்வியடைந்தால் பெங்களூரு மற்றும் மும்பை அணி வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

    ×